கொய்யா மரம்
அறிவியல் பெயர் :
சிடியம் குஜாவா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- இம்மரம் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
- கிளைகள் கீழ் நோக்கி அமைந்திருக்கும்.
- மரம் மென்மையானது மற்றும் பச்சை அல்லது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது. மரப்பட்டை சிறிது சிறிதாக காய்ந்து உதிரக்கூடியது.
- இலைகள் எதிரெதிரெ அமைந்திருக்கும் மற்றும் பச்சை நிறமுடையது.
- காய் பெர்ரி வகையை சேர்ந்தது. நீள்வட்டமுடையது மற்றும் முதிர்ந்தபின் மஞ்சள் நிறமுடையது.
- கனியினுள் உள்ள கூழ் போன்ற பகுதி வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமுடையது.
- காய் இனிப்பானது மற்றும் மணமானது.
- விதைகள் எண்ணற்றது மற்றும் மஞ்சள் நிறமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும். ஆனால் தற்பொழுது இந்தியா முழுவதும் பரவலாக வளர்க்கப்படும் மரமாகும்.
வாழிடம் :
இயற்கை காடுகளிலும் மற்றும் நீரோடைப்பகுதிகளிலும் அதிகம் வளர்கிறது.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5-7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 2000 மி.மீ
வெப்பநிலை :
15 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் வேர் கிழங்கு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதைகள் ஆர்தோடாக்ஸ் விதைகளாகும். எனவே நீண்ட நாட்களுக்கு விதைகளை சேமித்து வைக்க முடியாது.
- 6 சதவிகித நீர் அளவு கொண்ட விதைகளை 24 மணி நேரம் நீர்த்த நைட்ரஜன் கரைசலில் ஊர வைப்பதன் மூலம் விதைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்.
- இவ்விதைகளை - 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் 66 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
- காயானது வெடிக்கும் தருவாயில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட காயானது சூரிய வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகள் பின் தன்கு காற்றுபுக வண்ணம் மூடப்பட்ட பாத்திரத்தில் உலர வைக்கப்படுகிறது.
- இப்பாத்திரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது. ஏனெனில் இதன்
- விதைகள் முளைப்புத்திறனை விரைவாக இழந்துவிடும் தன்மை கொண்டது.
ஒட்டு நாற்று உற்பத்தி முறை :
விண்பதியம் :
- விண்பதியம் பொதுவாக கூட்டி என்றழைக்கப்படுகிறது. இந்நாற்று உற்பத்திமுறை மழை பருவ காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
- இம்முறை 80 – 85 சதவிகிதம் வெற்றியை தரக்கூடியது.
- விண்பதியம் முறைக்கு 1 வருட வயதான மரம் அல்லது 1 – 1.5 மீ வளர்ந்த கிளை ஏற்றதாகும்.
- நுனி மொட்டிலிருந்து 45 செ.மீ நீளத்தில் 2.5 – 3 செ.மீ அளவில் மேற்தோல் நீக்கப்படுகிறது.
- மேற்தோழானது வட்டவடிவில் நீக்க வேண்டும்.
ஐ.பி.ஏ ஹார்மோன் வேர் உற்பத்திக்காக மேற்தோல் நீக்கப்பட்ட பகுதியில் தடவப்படுகிறது. 4000 – 5000 பி.பி.எம் உள்ள ஹார்மோன் பயன்படுத்தப்படுகிறது.
- மேற்தோல் நீக்கப்பட்ட பகுதியில் ஸ்பேக்னம் மாஸ் பலவை வைத்து பாலித்தீன் துண்டு கொண்டு கட்டப்படுகிறது.
- 3 – 5 நாட்களில் வேர்கள் முளைக்க துவங்கிவிடும்.
- 6 – 8 மாதங்களில் போதுமான அளவு வேர்கள் வளர்ந்துவிடுகிறது. இவை பாலித்தீன் துண்டில் நன்றாக வெளியே தெரியும் அளவிற்கு வளர்ந்து விடும்.
- மேற்தோல் நீக்கப்பட்ட இடத்தில் தண்டை வெட்டி தனி நாற்றாக உருவாக்கப்படுகிறது.
- தனி நாற்றாக வெட்டியபின் சுற்றப்பட்ட பாலித்தீன் துண்டு நீக்கப்படுகிறது.
- தனியே வெட்டப்பட்ட நாற்று வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட கலனில் வைக்கப்படுகிறது.
- புதிய இலைகள் துளிர்விடும் வரை நாற்றானது நிழலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
- புதிய கிளைகள் தோன்றியபின் அல்லது புதிய துனி மொட்டு வளர்ந்தபின் நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஜுன் - டிசம்பர் மாத கால இடைவெளியில் நடவுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- 5 – 6 மீ நடவு இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- 45 செ.மீ3 அளவுள்ள குழி நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- செம்மண், எரு 10 கிராம் மற்றும் 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு அடங்கிய கலவையை குழியினுள் இட்டு நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- மரம் நட்டவுடன் உயிர் நீர் பாய்ச்சுவது அவசியமாகும். பின் நடப்பட்டதிலிருந்து மூன்றாவது நாள் நீர் பாய்ச்ச வேண்டும்.
- பிறகு நீர் தேவைப்படும்பட்சத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
- பக்க கிளைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். பக்க கிளைகளை செப்டம்பர் - அக்டோபர் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாத கால இடைவெளியில் வெட்டுதல் சிறந்ததாகும்.
- 2 – 3 வருடமான மரம் பூக்கத்துவங்குகிறது.
- வருடத்திற்கு இருமுறை காய்க்கவல்லது. முதல் அறுவடை பிப்ரவரி – ஜுலை மாதத்திலும், இரண்டாம் அறுவடை செப்டம்பர் - ஜனவரி மாத இடைவெளியிலும் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் பழம் தோராயமாக 50,000 – 60,000 என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
உணவு:
- முழு பழமும் உண்ணக் கூடியது.
- விட்டமின் சி (10-2இ000 அப/100 ப) விட்டமின் எ மற்றும் பெக்டின் (0.1-1.8%) நன்றாக பழுத்த பழத்தில் பெக்டின் அதிகமாக காணப்படும்.
- ஜாம் மற்றும் பழச்சாறு தயாரிக்கலாம்.