பரசு மரம்
அறிவியல் பெயர் :
பியூடியா மோனோஸ்பெர்மா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை வெளிர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் அடர் சிவப்பு நிறமுடையது.
- ஒவ்வொரு நெற்றும் ஒரு விதையை கொண்டிருக்கும். விதைகள் காகிதம் போன்ற சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடைய மேற்தோலை கொண்டது.
பரவல் :
- இம்மரம் இந்திய பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
கடலோர மண், கரிசல் மண் மற்றும் வாய்கால் ஓரங்களிலுள்ள மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
7-8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1330 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 3800 மி.மீ
வெப்பநிலை :
47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 9800 – 14800 விதைகளிருக்கும்.
- விதைகளை ஒரு வருடம் வரை சேகரித்து வைக்கலாம்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு மே மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- தாய்பாத்திக்கு தினமம் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
- நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 2 - 3 மீ என இருக்க வேண்டும்.
- மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க அவ்வப்போது மரங்களை நீக்க வேண்டும்.
- அரக்கு தயாரிப்பிற்கு அவ்வப்போது பக்க கிளைகளை நீக்கவும் மர உச்சி பகுதியை நீக்கவும் வேண்டும்.
- 15 - 30 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் அரக்கு உற்பத்திக்கு அதிகமாக பயன்படுகிறது. அரக்கு உற்கத்திக்கு 4 செ.மீ ஆழம் வரை மேற்தோல் நீக்கப்பட வேண்டும்.
- கடலோர பகுதி, களிமண் மற்றும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மரப்பொருக்கத்தை அதிகரிக்க இம்மரம் வளர்க்கப்படுகிறது.
- இம்மரம் விறகிற்காகவும், துப்பாக்கி மருந்து தயாரிக்க மற்றும் கரிகட்டை தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் பட்டையிலிருந்து சிவப்பு நிற கோந்து எடுக்கப்படுகிறது. இக்கோந்து பியூட்டியா கோந்து என அழைக்கப்படுகிறது.
தீவனம்:
- எருமைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- மலர்களில் பெறப்படும் ஆரஞ்சு நிறசாயம் பருத்தி ஆடைகளுக்கு நிறமிட பயன்படுகிறது. இலைத்தட்டு மற்றும் பீடி சுற்றுவதற்கு இலைகள் பயன்படுகிறது.
- பட்டையை கீறுவதன் மூலம் சிவப்பு நிற கோந்து அல்லது பெங்கால் பிசின் பெறப்படுகிறது.
-->